Johnston Fernando
செய்திகள்அரசியல்இலங்கை

பொருளாதாரம் வீழ்வதற்கு இடமளிக்கமாட்டோம்! – ஜோன்ஸ்டன் பதிலடி

Share

நாட்டின் பொருளாதாரம் வீழ்வதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, மிகவும் சிறப்பாக – திறமையுடன் நிதி அமைச்சை வழி நடத்துகின்றார் – என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்லவால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதத்திலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல இரு நாட்கள் விவாதம் கோரியதுடன், நிதி அமைச்சர் தொடர்பிலும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஜனவரி முதலாம் திகதி நாடு வங்குரோத்தடையும், இது தொடர்பில் நேரலையில் வந்து தகவல் வெளியிடப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார வல்லுனர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் சுட்டிக்காட்டினர். தூரநோக்கு சிந்தனையின்றி, தற்காலிக மகிழ்ச்சிக்காகவே அவர்கள் இவ்வாறு கருத்து வெளியிடுகின்றனர் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

நாட்டில் பொருளாதாரம் விழுவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். நிதி அமைச்சர் சிறப்பாக செயற்படுகின்றார். நிதி அமைச்சர் திறமையாக வழிநடத்துகின்றார்.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...