செய்திகள்இலங்கை

நிறுவனங்களுக்கு மேலதிக வரி!

Share

இரண்டு பில்லியனுக்கும் அதிகமான வருடாந்த இலாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு 25% மேலதிக வரி அறவிடுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சு நேற்றுமுன்தினம் (07) வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 1 – 2020 இல் தொடங்கும் மதிப்பீட்டு ஆண்டைப் பொறுத்தமட்டில் இந்த வரி விதிக்கப்படும்.

இந்த வரிகள் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு வருமானச் சட்டத்திற்கு உட்பட்ட நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகின்றன. இந்நிறுவனங்களில் ஓய்வூதிய நிதி, பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய பணிக்கொடை நிதி ஆகியவை அடங்கும்.

இதுதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கருத்து தெரிவிக்கையில், இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து 65 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரி விதிக்கப்படும்.

உழைக்கும் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் இருந்து ஒதுக்கப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு இவ்வாறு வரி விதிப்பது கேவலமான செயல் என்றும் அவர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...