செய்திகள்இலங்கை

நிறுவனங்களுக்கு மேலதிக வரி!

Share

இரண்டு பில்லியனுக்கும் அதிகமான வருடாந்த இலாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கு 25% மேலதிக வரி அறவிடுவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சு நேற்றுமுன்தினம் (07) வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 1 – 2020 இல் தொடங்கும் மதிப்பீட்டு ஆண்டைப் பொறுத்தமட்டில் இந்த வரி விதிக்கப்படும்.

இந்த வரிகள் 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு வருமானச் சட்டத்திற்கு உட்பட்ட நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகின்றன. இந்நிறுவனங்களில் ஓய்வூதிய நிதி, பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய பணிக்கொடை நிதி ஆகியவை அடங்கும்.

இதுதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கருத்து தெரிவிக்கையில், இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து 65 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரி விதிக்கப்படும்.

உழைக்கும் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் இருந்து ஒதுக்கப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கு இவ்வாறு வரி விதிப்பது கேவலமான செயல் என்றும் அவர் கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...