இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை கண்டித்து இன்றைய தினம் மாதகலில் வீதியை முடக்கி போராட்டமொன்று இடம்பெற்றது.
மாதகல் கிராமிய கடற்றொழில் அமைப்புகள் இணைந்து துறைமுக சந்தியில் படகுகள் வலைகளை வீதியில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துமீறும் இந்திய படகுகளை கைது செய்யகோரியும் உயிரிழந்த இரண்டு மீனவர்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
#SriLankaNews
Leave a comment