Connect with us

செய்திகள்

டக்லஸை கண்டுகொள்ளாத மீனவர்கள்! – போராட்டத்தால் அதிர்ந்த மருதங்கேணி பிரதேச செயலகம்

Published

on

20220201 091803 scaled

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மீனவர்கள் இன்று காலை 7.30 மணியளவில் முற்றுகைப் போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுக்க கோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மருதங்கேணி பிரதேச செயலகத்தின் இரண்டு வாசல்களையும் முடக்கி பிரதான வீதியில் அமர்ந்திருந்த மீனவர்கள்,எமது கடற்பரப்பு இந்தியாவுக்கு விற்கப்பட்டதா, உயிரை குடிக்கும் இந்திய படகை தடுத்து நிறுத்து, இந்திய படகுகளுக்கு நாங்கள் இரையா,வலை வீச உயிர் பயம் என்ன செய்வோம்,எமது கடல் எமக்கு வேண்டும்,கடற்றொழில் அமைச்சே திரும்பிப்பார், மீனவர்களை கொல்லாதே போன்ற கோஷங்களையும் எழுப்பினர்.

சிலமணி நேரங்களின் பின்னர் அங்கு வருகைதந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போராட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றினார்.

20220201 093545

அவர் கருத்து தெரிவிக்கையில், இந்திய மீன்பிடிப் படகுகளின் வருகையை தடுப்பதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமை பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளருக்கு நஷ்டஈடு வழங்குவது சம்பந்தமாக விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதன்போது இலங்கைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய படகுகளை கைது செய்வது தொடர்பிலும் அவ்வாறு அதனை மீறி வருகை தந்தால் அவற்றை இலங்கை மீனவர்கள் பிடிப்பதற்கு அனுமதி கொடுக்க எழுத்து மூலம் அனுமதி தரவேண்டும் என அமைச்சர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் போராட்டகாரர் ஒருவர் கோரிக்கை விடுத்தார்.

நான் வாயால் சொல்லும் வாக்குறுதியும் எழுத்தில் தரும் வாக்குறுதியும் ஒன்றுதான். அதனால் எனது வாக்குறுதியை நம்புங்கள் என கூறியபோது அதனை போராட்டக்காரர்கள் ஏற்க மறுக்கவே அங்கிருந்து கடற்றொழில் அமைச்சர் வெளியேறிச் சென்றார்.

இதனையடுத்து உயிரிழந்த இருவரின் இறுதிச் சடங்கையும் மேற்கொள்ளும் பொருட்டு தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாகவும் நீதி கிடைக்காவிட்டால் தொடர்ந்தும் போராடுவோமெனவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

போராட்டம் காரணமாக மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முடியாமல் வெளியில் காத்திருந்ததுடன், அப் பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

#SriLankaNews

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்22 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்3 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்4 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 13 Rasi Palan new cmp 13
ஜோதிடம்5 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 25.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp 12 Rasi Palan new cmp 12
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 24.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 24, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 11 Rasi Palan new cmp 11
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 23.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan\ இன்றைய ராசிபலன் ஏப்ரல் 23, 2024, குரோதி வருடம் சித்திரை...