திருகோணமலை- திருக்கடலூர் பகுதியிலுள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உறங்கிக் கொண்டிருந்த தனது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக குறித்த இளைஞனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் அதேபகுதியில் வசித்து வரும் 19வயதான இளைஞன் எனவும் தெரியவருகின்றது.
குறித்த சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனை முடிவுற்ற உடன் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
#SrilankaNews
Leave a comment