Johnston Fernando
செய்திகள்அரசியல்இலங்கை

சதொச வழக்கு! – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை

Share

சதொச ஊழியர்களை அரசியலில் ஈடுபடுத்தியதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுக்களில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சதொச ஊழியர்கள் 153 பேரை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட 3 வழக்குகளில் இருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு இன்று காலை கொழும்பு பிரதான நீதவான் புத்திக ரகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டபோதே மேற்கண்ட தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அமைச்சர் பெர்னாண்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு 2010 ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்தது.

2010 – 2014 காலப்பகுதியில் 153 சதொச ஊழியர்களை தேர்தல் பிரசாரம் மற்றும் ஏனைய சேவைகளுக்காக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வழக்குகளை தாக்கல் செய்த ஆணையம், அமைச்சர் பெர்னாண்டோவின் நடவடிக்கையால் 40 மில்லியன் ரூபா அரசுக்கு நட்டம் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...