ripe rice paddy field background 127755 665
செய்திகள்அரசியல்இலங்கை

விவசாயிகளுக்கு இழப்பீடு! – ஒரு கிலோவுக்கு 25 ரூபா

Share

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஆண்டில் பெரும்போகத்தில் பெருமளவான நிலங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில், குறித்த பயிர்களுக்காக இழப்பீடு வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவின் ஆலோசனைக்கமைய 40 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தீர்மானத்துக்கு அமைச்சரவை, அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்துடன், நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக இன்று முதல் விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோகிராம் நெல் 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது. இத் தீர்மானத்துக்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெரும்போக விளைச்சல் குறைவடையும் விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்கு 25 ரூபா ஒரு கிலோ நெல்லுக்கு 25 ரூபா நஷ்ட ஈடாக வழங்கப்படும் எனவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1732374016 images 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மலைப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய...

24514649 rain
செய்திகள்விளையாட்டு

இலங்கை – பாகிஸ்தான் டி20 ரத்து செய்யப்பட்ட போட்டியின் நுழைவுச்சீட்டுகள் நாளை செல்லுபடியாகும்!

மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டிக்காக...

AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில்...

06 1
செய்திகள்அரசியல்இலங்கை

2026-ஆம் ஆண்டு இலங்கையின் பாரிய வீட்டு நிர்மாண ஆண்டு: ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பிரகடனம்!

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மற்றும் வறிய மக்களுக்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் கீழ்,...