Corona
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருமண நிகழ்வு! – நாட்டில் மீண்டும் கொவிட் கொத்தணி

Share

மினுவாங்கொடை, காமரகொட பகுதியைச் சேர்ந்த இரு சகோதரர்களின் திருமணத்திற்குப் பிறகு அப் பிரதேசத்தில் கொவிட் 19 கொத்தணியொன்று உருவாகியுள்ளது.

இதில் மணமகனான மூத்தசகோதரர் உட்பட 26 பேருக்கு தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூத்த சகோதரனும், தம்பியும் ஒரே நாளில் இரண்டு மணப்பெண்களை அழைத்து வந்திருந்தனர்.

இரண்டு திருமணங்களும் சந்தலங்காவ பிரதேசத்திலுள்ள தேவாலயத்தில் இடம்பெற்றது.  இரண்டாவது நாளான நேற்று திவுலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் திருமண வைபவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் திருமண நிகழ்வில் இரு தரப்பினரிலும் சுமார் 350 பேர் கலந்து கொண்டனர்.

இதில் மணமகனான மூத்த சகோதரர் மற்றும் ஐந்து பேரை முதல் முதலில் கொவிட் 19 தொற்றாளர்களாக அடையாளம் கண்ட மினுவாங்கொடை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், அந்த தேவாலயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 28 பேரை உடனடியாக அன்டிஜென் சோதனைக்குட்படுத்தினர். இதில் 26 பேர் கொவிட் 19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இப்பிரதேசத்தில் வசிக்கும் பலர் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்களில் சிலர் சுகாதார ஆலோசனைகளை புறக்கணிப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் பலர் அன்டிஜென் சோதனையை புறக்கணித்து தங்கள் கடைகளைத் திறந்து வைத்திருந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...