09Srilanka AY 10
அரசியல்இலங்கைசெய்திகள்

ஆபிரிக்காவாகிறது இலங்கை – சந்திரிக்கா!!

Share

ஆபிரிக்காவிலுள்ள சில ஏகாதிபத்திய நாடுகளில் நடப்பதுபோல்தான் தற்போது இலங்கையிலும் நடக்கின்றது.” – என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் விமர்சித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக தற்போதைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் மூன்று மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டது.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சந்திரிக்கா அம்மையார்,

” இவர்கள் (ஆட்சியாளர்கள்) அனைத்து தவறுகளையும் செய்துவிட்டு தற்போது நல்லவர்கள்போல் செயற்பட்டுவருகின்றனர்.

அவர்கள் இழைந்த தவறுகளை, குற்றங்களை சுட்டிக்காட்டியவர்களை, குற்றவாளிகளாக்குவதற்கான முயற்சி இடம்பெற்றுவருகின்றது.

நியாயமான விசாரணைகளின் பின்னர் யாராவது, தவறிழைத்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டால் அல்லது வழக்கு தொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவந்தால், தான் பழிவாங்கப்பட்டுள்ளதாகக்கூறி, விசாரித்தவர்களை தண்டிப்பது உலகில் வேறு எங்கும் நடக்காது.

சர்வாதிகாரிகள் உள்ள ஒரு சில ஆபிரிக்க நாடுகளிலேயே இப்படி நடக்கும்.” – என்றார்.

 

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...