X ray
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பரிசோதனை அறிக்கைக்காக மாதக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்!!

Share

கொழும்பு தேசிய பல் வைத்தியசாலையில் பல மாதங்களாக ‘எக்ஸ்ரே அட்டைகள் இன்மையால் பரிசோதனை அறிக்கைகளைப் பெறுவதில் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கின்றனர்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக வரும் நோயாளிகளுக்கு வைத்தியர்கள் ‘எக்ஸ்ரே’ பரிசோதனைக்கு பரிந்துரைத்தாலும் அவற்றை பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலை காணப்படுவதாக  நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில் கொழும்பு தேசிய பல் வைத்தியசாலை பணிப்பாளர், அஜித் தண்டநாராயணனிடம் வினவிய போது,

சுகாதார வழங்கல் துறையில் சிறிய அளவிலான எக்ஸ்ரே அட்டைகள் முடிவடைந்து பல மாதங்கள் கடந்துவிட்டதாகவும் வௌியில் வாங்குவதற்கு சிறிய அளவிலான எக்ஸ்ரே அட்டைகள் இருப்பில் இல்லாத பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கொழும்பு தேசிய பல் வைத்தியசாலையில் அருகில் உள்ள  வைத்தியசாலைகளில்  மீள வழங்குவதாக கூறி சிறிய அளவிலான எக்ஸ்ரே அட்டைகள் பெற்றுக்கொள்ளப்பட்டது.

அந்த வைத்தியசாலைகளிலும் தற்சமயம் சிறிய அளவிலான எக்ஸ்ரே அட்டைகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...