X ray
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பரிசோதனை அறிக்கைக்காக மாதக்கணக்கில் காத்திருக்கும் மக்கள்!!

Share

கொழும்பு தேசிய பல் வைத்தியசாலையில் பல மாதங்களாக ‘எக்ஸ்ரே அட்டைகள் இன்மையால் பரிசோதனை அறிக்கைகளைப் பெறுவதில் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கின்றனர்.

மருத்துவ சிகிச்சைகளுக்காக வரும் நோயாளிகளுக்கு வைத்தியர்கள் ‘எக்ஸ்ரே’ பரிசோதனைக்கு பரிந்துரைத்தாலும் அவற்றை பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலை காணப்படுவதாக  நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பில் கொழும்பு தேசிய பல் வைத்தியசாலை பணிப்பாளர், அஜித் தண்டநாராயணனிடம் வினவிய போது,

சுகாதார வழங்கல் துறையில் சிறிய அளவிலான எக்ஸ்ரே அட்டைகள் முடிவடைந்து பல மாதங்கள் கடந்துவிட்டதாகவும் வௌியில் வாங்குவதற்கு சிறிய அளவிலான எக்ஸ்ரே அட்டைகள் இருப்பில் இல்லாத பிரச்சினை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கொழும்பு தேசிய பல் வைத்தியசாலையில் அருகில் உள்ள  வைத்தியசாலைகளில்  மீள வழங்குவதாக கூறி சிறிய அளவிலான எக்ஸ்ரே அட்டைகள் பெற்றுக்கொள்ளப்பட்டது.

அந்த வைத்தியசாலைகளிலும் தற்சமயம் சிறிய அளவிலான எக்ஸ்ரே அட்டைகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...