202201131332492825 Tamil News Video People Forced To Live In Metal Boxes Under Chinas SECVPF
செய்திகள்உலகம்

தொற்றுக்குள்ளானோர் இருப்புப் பெட்டிகளில் அடைப்பு!! – சீனாவில் பயங்கரம்

Share

சீனாவின் வுஹான் மாநிலத்தில் தோன்றிய கொரோனாத் தொற்று தற்போது பல்வேறு திரிபுகளை எடுத்து தற்போது உலகம் முழுதும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதைய புள்ளி விபரங்களின்படி உலகம் முழுதும் கிட்டத்தட்ட 31 கோடி மக்களுக்கும் அதிகமானோர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவின் ஆரம்பம் சீனா என்றாலும், ஆரம்பித்த சிறிது காலத்திலேயே கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டதாக சீனா தெரிவித்திருந்தது. இருப்பினும் சீனாவில் தற்போது மீண்டும் கொரோனாத் தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், தொற்றால் பாதிக்கப்படும் மக்களை சீன அரசு இரும்பு பெட்டிகளில் அடைத்து வைத்துள்ளது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக இருப்பு பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் என வயது வித்தியாசம் பாராது சீன அரசு இரும்பு பெட்டிகள் அடைகிறது. குறித்த இரும்பு பெட்டியில் ஒரு படுக்கையறை மற்றும் கழிவறை மட்டுமே காணப்படுகிறது.

குறித்த ஒரு பகுதியில் உள்ள ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டால் அந்த பகுதியில் உள்ள அனைவரும் இரும்பு பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் குளிர் காலா ஒலிம்பிக் தொடர் அடைத்த மாதமளவில் ஆரம்பமாகவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ‘பூஜ்ஜிய கொரோனா’ என்ற கிழக்கை அடிப்படையில் சீனா அரசு மக்களை இரும்பு பெட்டிகளில் அடைத்து தனிமைப்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

#World

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...