kai
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கோப்பாய், கொக்குவில் பகுதிகளில் வாள்வெட்டு! – ஒருவர் கைது

Share

வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் மற்றும் கொக்குவில் உள்ள வீடுகளில் புகுந்தே குறித்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைதானவர் மானிப்பாய் புதுமடத்தைச் சேர்ந்த கொலின் (வயது-26) என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபரிடமிருந்து கூரிய ஆயுதம் ஒன்றும் கைப்பட்டப்பட்டுள்ளது. கைதான நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மானிப்பாய் மற்றும் கொக்குவில் பகுதிகளில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் கடந்த நவம்பர் 23ஆம் திகதி புகுந்த கும்பல் ஒன்று வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட நிலையில் அங்கிருந்து தப்பித்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கைதான நபருக்கு எதிராக ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
TNA
இலங்கை

சி.வி.கே.சிவஞானத்தின் வீட்டிற்கு வந்த சங்கு.

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று...

sumanthiran
இலங்கை

சுமந்திரன் வேண்டாம் – வெடித்தது போராட்டம்.

நாளைய தினம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனிக்கு சட்டத்தரணி...

selvam
இலங்கை

தமிழ் மற்றும் முஸ்லீம் கடசிகள் ஒன்றிணைவு – சொற்போரில் ஈடுபட்டுள்ள இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கூட்டமைப்பை கூட்டுச் சாம்பார் என்றும், இது...

இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...