Sankanai 01
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புதிய வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீட்டை ஏற்க முடியாது: கொதித்துப்போன வியாபாரிகள்

Share

சங்கானை மரக்கறி சந்தை வியாபாரிகள் மற்றும் வெற்றிலை சந்தை வியாபாரிகள் ஆகியோர் இணைந்து இன்று (07) ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இதனால் சந்தை நடவடிக்கைகளும் முற்றுமுழுதாகப் பாதிப்படைந்ததுள்ளது.

திடீர் வரியேற்றம் மற்றும் பிரதேச சபையினர் உள்ளக சுற்றுப்புறத்தைக் கண்காணிக்காமை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Sankanai 04

இதன்போது கருத்து தெரிவித்த வியாபாரிகள்,

எமது சந்தையிலிருந்து கொரோனா நிலைமையின் காரணமாக வெற்றிலை மற்றும் பழக்கடை என்பவற்றினை பழைய மீன் சந்தை பகுதிக்கு இடமாற்றம் செய்திருந்தனர்.

தற்போதைய நிலைமையில் பிரதேச சபையினர் எமது இடங்களில் புதிய வியாபாரிகளுக்கு வழங்குவதற்காக பிரதேச சபையின் அனுமதியுடன் குத்தகையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.

நாங்கள் 25 வருடங்களுக்கு மேலாக குறித்த இடத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.

Sankanai 05

எங்களுக்கு இந்த இடத்தினை மாற்றம் செய்து புதிய வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்வது என்பது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று சுகாதாரப் பகுதியினர் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்று நிலைமைக்கு ஏற்ற வகையில் எங்களை புதிய இடங்களுக்கு அனுமதிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

Sankanai 02

மேலும், பிரதேச சபையினர் தற்போது உள்ள இடங்களில் புதிய வியாபாரிகளுக்கு இட ஒதுக்கீடு செய்கின்றனர்.

இதனால் தற்போது பாதுகாப்பற்ற தரமற்ற கழிவுகள் கொட்டப்படுகின்ற இடத்தில்தான் எமது வியாபார நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது என்றும் வியாபாரிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Mathakal Protest 02

நுளம்பு, வெயில் ஆகியவற்றால் மிகவும் கடும் அவதிப்படுகிறோம். குறித்த பிரதேசம் துர்நாற்றம் வீசுகின்றமையால் மக்கள் குறித்த இடங்களுக்கு வந்து பொருட்களை கொள்வனவு செய்வதில் மந்த நிலை காணப்படுகின்றது எனவும் கூறியுள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 4
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பியுடன் மறைகர அரசியல்! குற்றச்சாட்டுக்களை புறக்கணித்த ரங்க திசாநாயக்க

ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர் தந்தன குணதிலக்க தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும்,அவை உண்மைக்கு புறம்பானவை என...

12 4
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள்.. அர்ச்சுனாவின் பகிரங்க குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி...

11 4
இலங்கைசெய்திகள்

வலுக்கும் தாஜுதீன் விவகாரம்.. நாமலின் சந்தேகத்திற்கிடமான ஆர்வம்!

வசீம் தாஜுதீனின் மரணம் குறித்த புதிய விசாரணைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற...

10 4
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்து – அச்சத்தில் ராஜபக்ச குடும்பத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்று இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமையினால்...