gamini lokuge
இலங்கைஅரசியல்செய்திகள்

சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்கியது ஏன்? – காமினி கூறிய உண்மை

Share

சுசில் பிரேமஜயந்த ஏன் பதவி நீக்கப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. அடுத்த அமைச்சரவைக் கூட்டம் அல்லது ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் இது பற்றி கேட்டறிந்து அறியத்தருகின்றேன்.” – என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,

இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த ஏன் நீக்கப்பட்டார் என்பது தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

” இந்த ஊடக சந்திப்புக்கு வரும் வழியில் எனக்கு வந்த குறுந்தகவல்மூலம்தான் விடயத்தை அறிந்தேன். எதற்காக அவர் பதவி நீக்கப்பட்டார் என்பது எனக்கு தெரியாது. இது பற்றி ஆராய்ந்து பார்க்கின்றேன்.

அரசில் இருந்தால் கூட்டு பொறுப்பு இருக்க வேண்டும். அரசை பாதுகாக்க வேண்டும். கூட்டு பொறுப்பை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அண்மையில் எச்சரித்திருந்தார். ” – என்றார் அமைச்சர் காமினி லொக்குகே.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...