Screenshot 20220101 193113 Chrome
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் தொலைபேசி திருட்டு! – வாழைச்சேனையில் மூவர் கைது

Share

யாழ்ப்பாணத்தில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து அண்மையில் திருட்டில் ஈடுபட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் வாழைச்சேனையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகைக்கு தந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சந்தேகநபர் திருடிய தொலைபேசிகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 6 தொலைபேசியிலும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த டிசெம்பர் 22ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் – கே.கே.எஸ். வீதி – சத்திரச்சந்தியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் திருட்டு சம்பவம் இடம்பெற்றது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், குறித்த விற்பனை நிலையத்தில் பெறப்பட்ட சிசிரிவி பதிவுகள் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினர் நேற்றுமுன்தினம் வாழைச்சேனை சென்று சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட மூவரும் யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...