Death 3
செய்திகள்இந்தியா

இறுதிச்சடங்கின் போது உயிரிழந்தவர் கண்விழித்தமையால் அதிர்ச்சி (வீடியோ)

Share

உயிரிழந்த நபரின் உடலுக்கு சுடுகாட்டில் தீ வைப்பதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில் அவர் திடீரென கண் விழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் நரேலா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. 62 வயதான சதீஷ் பரத்வாஜ் என்பவர் நேற்று முன் தினம் உயிரிழந்தார் என குடும்பத்தார் தெரிவித்து, பின்னர் அவரின் சடலத்திற்கு இறுதிச்சடங்கு செய்தனர்.

இதை தொடர்ந்து அவரது சிதைக்கு தீ வைப்பதற்கு சில நாழிகையில் அவர் கண்விழித்துள்ளார்.

பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில்,

குறித்த நபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சில காலமாகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் வெண்டிலேட்டரில் இருந்து அவரை எடுத்தவுடன் மூச்சு விடுவதை நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து சதீஷ் இறந்துவிட்டதாக குடும்பத்தார் கருதியுள்ளனர். மருத்துவமனையின் அறிவுறுத்தலை கேட்காமலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என நினைத்து அழைத்து வந்துள்ளனர் என கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என பொலிஸார் கூறியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1813418 flight12
செய்திகள்இந்தியா

அடர்ந்த மூடுபனி: டெல்லி விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

வட இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான மூடுபனி காரணமாக, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச...

sabarimala 2025 11 be56e17ca03c9aed28b89ec1142a3bf0 3x2 1
செய்திகள்இந்தியா

சபரிமலை கோயில் தங்கத் திருட்டு வழக்கு: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் உட்பட இருவர் கைது!

கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் இடம்பெற்ற தங்கத் தகடு மற்றும் தங்கக் கவசத் திருட்டு...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

marriage5872 1667871504
இந்தியாசெய்திகள்

40 நாட்களில் 150 திருமணங்கள் ரத்து; சமூக ஊடகங்களே பிரதான காரணம்!

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் கடந்த 40 நாட்களில் மட்டும் சுமார் 150 திருமணங்கள்...