Death 3
செய்திகள்இந்தியா

இறுதிச்சடங்கின் போது உயிரிழந்தவர் கண்விழித்தமையால் அதிர்ச்சி (வீடியோ)

Share

உயிரிழந்த நபரின் உடலுக்கு சுடுகாட்டில் தீ வைப்பதற்கு சில நிமிடங்களே இருந்த நிலையில் அவர் திடீரென கண் விழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் நரேலா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. 62 வயதான சதீஷ் பரத்வாஜ் என்பவர் நேற்று முன் தினம் உயிரிழந்தார் என குடும்பத்தார் தெரிவித்து, பின்னர் அவரின் சடலத்திற்கு இறுதிச்சடங்கு செய்தனர்.

இதை தொடர்ந்து அவரது சிதைக்கு தீ வைப்பதற்கு சில நாழிகையில் அவர் கண்விழித்துள்ளார்.

பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து பொலிசார் கூறுகையில்,

குறித்த நபர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சில காலமாகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அங்கு அவருக்கு வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் வெண்டிலேட்டரில் இருந்து அவரை எடுத்தவுடன் மூச்சு விடுவதை நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து சதீஷ் இறந்துவிட்டதாக குடும்பத்தார் கருதியுள்ளனர். மருத்துவமனையின் அறிவுறுத்தலை கேட்காமலேயே அவர் உயிரிழந்துவிட்டார் என நினைத்து அழைத்து வந்துள்ளனர் என கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என பொலிஸார் கூறியுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை: மகளிருக்கு மாதம் ₹2,500 மற்றும் மணப்பெண்களுக்குத் தங்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய், எதிர்வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான...

world 205
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கை: மகளிருக்குத் தங்கம் மற்றும் இலவச மின்சார வாக்குறுதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...

world 196
செய்திகள்இந்தியா

டைம் 100 – 2026: உலகின் மிகச் செல்வாக்கு மிக்க நபர்கள் பட்டியல் வெளியீடு!

உலகின் மிகச் செல்வாக்கு மிக்க 100 நபர்களைக் கொண்ட 2026-ஆம் ஆண்டிற்கான ‘டைம் 100’ (TIME100)...

world 73
செய்திகள்இந்தியா

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டிய விஜய்: காரைக்குடியில் பேச அனுமதி மறுப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காரைக்குடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்த நிலையில், காவல்துறை...