முதல் முறையாக சென்சேஷன் நடிகையுடன் ஜோடியாகும் சிவகார்த்திகேயன்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்
ஏனையவை

அடுத்த ஆண்டு சிவகார்த்திகேயன் கைவசம் இத்தனை படங்களா?

Share

தமிழ் சினிமாவில் தற்போது தனக்கான ஒரு இடத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தக்கவைத்திருக்கிறார்.

இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

அந்த வகையில் கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்த ஆண்டு கைவசம் உள்ள திரைப்படங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே பெரியளவில் காணப்படுகிறது.

இப்படத்தை காதலர் தினமான பிப்ரவரி 14 அல்லது சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக, இன்று நேற்று நாளை படத்திற்கு பின் இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயனுடன் இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம் அயலான். Alien-யை முக்கிய கதாபாத்திரமாக காட்டப்படவுள்ள அயலான் படத்தை பெரிய பொருட்செலவில் எடுத்துள்ளனர்.

இந்தப்படமும் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் முதல்முறையாக இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை அட்லீயின் உதவி இயக்குனர் இயக்கி வருகிறார். இப்பொது படப்பிடிப்பில் இருக்கும் இந்த திரைப்படமும் 2022 வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.

மேலும் ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தை கமல் தயாரிக்கவுள்ளார். இப்படமும் 2022 ஆம் ஆண்டு தொடங்கலாம் என கூறப்படுகிறது.

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் பைலிங்குவல் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் ஜனவரி தொடங்கும் என்றும் அதன் அறிவிப்பும் விரைவில் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...