P.B. Jayasundera
செய்திகள்அரசியல்இலங்கை

பதவி விலகுகிறார் பி.பீ. ஜயசுந்தர

Share

ஜனாதிபதி செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, 2022 பெப்ரவரி முதலாம் திகதி முதல் நிதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகராக செயற்படவுள்ளாரென அறியமுடிகின்றது.

ஜனாதிபதி செயலாளராக பதவி வகிக்கும் பிபீ ஜயசுந்தரவை பதவி விலகுமாறு ஆளுங்கட்சியில் உள்ள உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

இதனால் பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ள அவர், இதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தை ஜனாதிபதி ஏற்று, புதிய செயலாளரை நியமிக்கும்வரை பிபீ ஜயசுந்தர பதவியில் நீடிப்பார்.

அதன்பின்னர் அவர் நிதி அமைச்சுக்கு செல்லவுள்ளார். பிரதமரின் ஆலோசனையின் பிரகாரம் அவருக்கு சிரேஷ்ட ஆலோசகர் பதவி வழங்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் பிபீ ஜயசுந்தர, திறைசேரி செயலாளராக செயற்பட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...