Subramaniyam
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எங்களுக்குப் பிச்சை போட்டதாகக் கூறுவது கேவலமானது!!

Share

தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் எமது புலத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவரும், மாதகல் மேற்கு கிராமிய அபிவிருத்தி கடற்றொழில் அமைப்பின் தலைவருமான என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

தினமும் எமது கடற்பரப்பில் வருடமொன்றிற்கு 144 தடவைகள் வந்து எமது வளங்களை அழிக்கிறார்கள். இது வருடக்கணக்கில் பார்க்கும்போது, எமது வளங்களை களவாடிச் செல்லும் தொகையானது 900 மில்லியனுக்கும் அதிகமானது.

எமது போராட்டத்திற்கு வழங்கிய சொற்ப பணத்தை முன்னிறுத்தி, எமக்கு உதவிகளை வழங்கியதாக கூறுவது மிகவும் கேவலமான விடயம். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

உண்மைக்குப் புறம்பான போராட்டதை நடத்துபவர்கள் உண்மையான தமிழர்கள் அல்ல.

இந்தக் கடலை நம்பி எமது வாழ்வாதாரம் தங்கியுள்ளது. எமது வளங்களைச் சூறையாடிவிட்டு, அதில் நீங்களும் சம்பாதித்துவிட்டு, எங்களுக்குப் பிச்சை போட்டதாகக் கூறுவது மிகவும் கேவலமானது என்றும் அவர் மேலும் கூறினார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய...

94745991
செய்திகள்உலகம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்: ஐஎஸ் இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன்...

default
உலகம்செய்திகள்

ஈரானில் 14-வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் உயிரிழப்பு; போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை!

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம்,...

1185212 anbu
செய்திகள்இலங்கை

யாருடன் கூட்டணி? – ராமதாஸ் இன்று சென்னை வருகை; நாளை வெளியாகிறது அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) கூட்டணி நிலைப்பாடு...