BANDU
இலங்கைசெய்திகள்

நாளை முதல் சிறப்பு நிவாரணப் பொதி விநியோகம் ஆரம்பம்!

Share

சதொச நிறுவனத்தினால் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வழங்கப்படவுள்ள நிவாரணப் பொதி சார்ந்த தகவல்களை இன்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டார்.

ரூபாய் 2,751 மற்றும் 2,489 க்கு சந்தையில் சில்லறை கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை சதொசவில் 1998 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். குறித்த பொதிகளை பதிவு செய்வதன் மூலம் வீடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

இப்பொதியை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கு 1998 என்ற இலக்கத்தினை அழைப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோன்று 0115 201 998 என்ற வட்ஸ்அப் எண்ணின் மூலமும் பதிவினை மேற்கொள்ள இயலும்.

இவ் பொதிகள் விநியோகம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதியில் 10 கிலோ சம்பா அரிசி, 2 கிலோ பழுப்பு சீனி, 1 பக்கெட் நூடுல்ஸ், 100 கிராம் தேயிலை பக்கெட், 250 கிராம் நெத்தலி, 2 சவர்க்காரக் கட்டிகள் மற்றும் 1 பக்கெட் பப்படம் ஆகியவை நிவாரண பொதியில் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...