BANDU
இலங்கைசெய்திகள்

நாளை முதல் சிறப்பு நிவாரணப் பொதி விநியோகம் ஆரம்பம்!

Share

சதொச நிறுவனத்தினால் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வழங்கப்படவுள்ள நிவாரணப் பொதி சார்ந்த தகவல்களை இன்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டார்.

ரூபாய் 2,751 மற்றும் 2,489 க்கு சந்தையில் சில்லறை கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை சதொசவில் 1998 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். குறித்த பொதிகளை பதிவு செய்வதன் மூலம் வீடுகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

இப்பொதியை பொதுமக்கள் பெற்றுக் கொள்வதற்கு 1998 என்ற இலக்கத்தினை அழைப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோன்று 0115 201 998 என்ற வட்ஸ்அப் எண்ணின் மூலமும் பதிவினை மேற்கொள்ள இயலும்.

இவ் பொதிகள் விநியோகம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதியில் 10 கிலோ சம்பா அரிசி, 2 கிலோ பழுப்பு சீனி, 1 பக்கெட் நூடுல்ஸ், 100 கிராம் தேயிலை பக்கெட், 250 கிராம் நெத்தலி, 2 சவர்க்காரக் கட்டிகள் மற்றும் 1 பக்கெட் பப்படம் ஆகியவை நிவாரண பொதியில் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...