Digital
செய்திகள்உலகம்

உலகின் முதல் டிஜிட்டல் அரசாங்கமாக துபாய்!!

Share

உலகின் முதல் டிஜிட்டல் அரசாங்கமாக துபாய் மாறியுள்ளது.

அதாவது உலகிலேயே 100 சதவீதம் காகிதம் இல்லாத அரசாங்கமாக துபாய் மாறியுள்ளதாக அந்நாட்டு பட்டத்து இளவரசர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் துபாயில் காகிதமில்லா டிஜிட்டல் நகரமாக மாற்றும் திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் செயற்படுத்தி வருகிறது.

அத்துடன் இத்திட்டத்தை 5 கட்டங்களாக பிரித்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதன் 5-வது கட்டத்தின் முடிவில், துபாயில் 45 அரசு துறைகளும் காகிதமற்ற டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டன.

இதனால் உலகின் முதல் டிஜிட்டல் அரசு என்ற பெருமையை துபாய் தன் வசமாக்கியுள்ளது.

இந்த துறைகள் 1,800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேவைகள் மற்றும் 10,500 க்கும் மேற்பட்ட முக்கிய பரிவர்த்தனைகளை வழங்குமென அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் தெரிவிக்கையில்,

இந்த சாதனை புதுமை, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் தமது வெற்றி பயணம் எனவும் ,

இது துபாயின் உலக முன்னணி டிஜிட்டல் மூலதனம் மற்றும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கவும்,அரசாங்க செயல்பாடுகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதில் இது ஒரு முன்மாதிரியாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர்,

இத்திட்டத்தின் மூலம், 2650 கோடி இந்திய ரூபாய்கள் அதாவது 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தமது அரசாங்கத்திற்கு சேமிக்க படுகின்றதெனவும், 14 மில்லியனுக்கும் அதிகமான மனித வேலை நேரமும் குறைந்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் தலைவர் பிரபாகரன்! மகிந்தவை மையப்படுத்தி நாமல் கொடுத்த சாட்டையடி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன...

24
இலங்கைசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13 ஆம் திகதிக்கு...

23
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவி உள்ள ஆபத்தான நபர்! மக்களின் உதவியை நாடும் காவல்துறை

2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய ஹெரோயின் தொகையுடன் தொடர்புடைய பாகிஸ்தானியரைக்...

22
இந்தியாசெய்திகள்

ஆட்டத்தை ஆரம்பித்த திமுக – தவெக பொதுச் செயலாளரை கைது செய்ய தனிப்படை

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர்...