23
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவி உள்ள ஆபத்தான நபர்! மக்களின் உதவியை நாடும் காவல்துறை

Share

2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய ஹெரோயின் தொகையுடன் தொடர்புடைய பாகிஸ்தானியரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

2016 ஏப்ரல் மாதம் இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) இலங்கைக் கடல் பகுதியில் நடத்திய சோதனையின் போது பதினேழு சந்தேக நபர்கள் 111.82 கிலோ ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து, சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சந்தேகநபரான பாகிஸ்தானியருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சந்தேக நபர் பிணை நிபந்தனைகளை கடைபிடிக்கத் தவறிய நிலையில், உயர் நீதிமன்றில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேக நபரைப் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் தேடப்படும் நபரைக் கைது செய்வதில் காவல்துறைக்கு உதவ 071-8591881 அல்லது 011-2343333 என்ற எண்களில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...