Digital
செய்திகள்உலகம்

உலகின் முதல் டிஜிட்டல் அரசாங்கமாக துபாய்!!

Share

உலகின் முதல் டிஜிட்டல் அரசாங்கமாக துபாய் மாறியுள்ளது.

அதாவது உலகிலேயே 100 சதவீதம் காகிதம் இல்லாத அரசாங்கமாக துபாய் மாறியுள்ளதாக அந்நாட்டு பட்டத்து இளவரசர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு முதல் துபாயில் காகிதமில்லா டிஜிட்டல் நகரமாக மாற்றும் திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் செயற்படுத்தி வருகிறது.

அத்துடன் இத்திட்டத்தை 5 கட்டங்களாக பிரித்து அதை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதன் 5-வது கட்டத்தின் முடிவில், துபாயில் 45 அரசு துறைகளும் காகிதமற்ற டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டன.

இதனால் உலகின் முதல் டிஜிட்டல் அரசு என்ற பெருமையை துபாய் தன் வசமாக்கியுள்ளது.

இந்த துறைகள் 1,800 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேவைகள் மற்றும் 10,500 க்கும் மேற்பட்ட முக்கிய பரிவர்த்தனைகளை வழங்குமென அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் எமிரேட்ஸ் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் தெரிவிக்கையில்,

இந்த சாதனை புதுமை, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்தில் கவனம் செலுத்தும் தமது வெற்றி பயணம் எனவும் ,

இது துபாயின் உலக முன்னணி டிஜிட்டல் மூலதனம் மற்றும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கவும்,அரசாங்க செயல்பாடுகள் மற்றும் சேவைகளை வடிவமைப்பதில் இது ஒரு முன்மாதிரியாக அதன் நிலையை வலுப்படுத்துகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர்,

இத்திட்டத்தின் மூலம், 2650 கோடி இந்திய ரூபாய்கள் அதாவது 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தமது அரசாங்கத்திற்கு சேமிக்க படுகின்றதெனவும், 14 மில்லியனுக்கும் அதிகமான மனித வேலை நேரமும் குறைந்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...