mahinda
செய்திகள்இலங்கை

துரிதப்படுத்தப்படும் சொலொஸ்மஸ்தான புனித பூமி அபிவிருத்தி!

Share

பொலன்னறுவை சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பொலன்னறுவை சொலொஸ்மஸ்தான புனித பூமியை விளக்குகளால் அலங்கரிப்பதன் அவசியம் தொடர்பாக ஆராயப்பட்டது.

எதிர்வரும் ஆண்டு மே மாதம் முதல் புனித பூமியின் மின்விளக்கு கட்டணங்கள் மத்திய கலாசார நிதியத்தில் இருந்து செலுத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

அத்தோடு புனித தலத்தின் வீதிகளை கார்பட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்காக புனித பூமிகளின் அபிவிருத்திக்காக எதிர்வரும் 5 ஆண்டுக்காக இந்தியா வழங்க உள்ள 15 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதி பயன்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

இதன்போது புனித பூமியின் கட்டுமானம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு முப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுத் தர வேணடும் என பிக்குமார்களால் பிரதமருக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...