mahinda
செய்திகள்இலங்கை

துரிதப்படுத்தப்படும் சொலொஸ்மஸ்தான புனித பூமி அபிவிருத்தி!

Share

பொலன்னறுவை சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பொலன்னறுவை சொலொஸ்மஸ்தான புனித பூமியை விளக்குகளால் அலங்கரிப்பதன் அவசியம் தொடர்பாக ஆராயப்பட்டது.

எதிர்வரும் ஆண்டு மே மாதம் முதல் புனித பூமியின் மின்விளக்கு கட்டணங்கள் மத்திய கலாசார நிதியத்தில் இருந்து செலுத்தப்பட வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

அத்தோடு புனித தலத்தின் வீதிகளை கார்பட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதற்காக புனித பூமிகளின் அபிவிருத்திக்காக எதிர்வரும் 5 ஆண்டுக்காக இந்தியா வழங்க உள்ள 15 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதி பயன்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

இதன்போது புனித பூமியின் கட்டுமானம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு முப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுத் தர வேணடும் என பிக்குமார்களால் பிரதமருக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 133
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வட்டுக்கோட்டையில் பயங்கரம்: இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றிரவு (ஏப்ரல் 12, 2026) இடம்பெற்ற மோதலில்...

world 132
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான உடன்படிக்கை சாத்தியமானது: ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் நம்பிக்கை!

அமெரிக்கா தனது ஆதிக்க மனப்பான்மையைக் கைவிட்டு, ஈரான் தேசத்தின் உரிமைகளை மதித்து நடந்தால், இரு நாடுகளுக்கும்...

world 130
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் முறைகேடு: சி.ஐ.டி-யில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புகார்!

நிலக்கரி ஒப்பந்தப்புள்ளி (Tender) செயல்முறையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை...

world 136
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால தேசியப் பூங்காவில் சட்டவிரோத வேட்டை: 92 கிலோ இறைச்சியுடன் இருவர் கைது!

யால தேசியப் பூங்காவின் 02-ம் மண்டலப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை...