1549431590 2811
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் மீது தாக்குதல்!!!

Share

சாவகச்சேரி நகரசபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் மீது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தபால் நிலைய வீதியில் இச்சம்பவம் நேற்று (07) இடம் பெற்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சாவகச்சேரி தபால் நிலைய வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற நகரசபை உறுப்பினர், தபால் நிலையத்திற்குள் மோட்டார் சைக்கிளை திருப்பிய வேளையில், அவருக்கு பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில், விபத்துக்குள்ளானது.

இதனால் ஆத்திரமடைந்த குறித்த இளைஞன் நகரசபை உறுப்பினர் மீது நடு வீதியில் வைத்து தாக்குதல் நடத்தியதுடன், இரண்டாயிரம் ரூபா பணத்தையும் பறித்துச் சென்றுள்ளார்.

இதில், வெள்ளாம்போக்கட்டி கொடிகாமத்தில் வசித்து வரும் சாவகச்சேரி நகரசபை உறுப்பினரான 72வயதுடைய க.வேலாயுதபிள்ளை என்பவரே தாக்குதலுக்கு உள்ளானார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....