1549431590 2811
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் மீது தாக்குதல்!!!

Share

சாவகச்சேரி நகரசபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் மீது, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தபால் நிலைய வீதியில் இச்சம்பவம் நேற்று (07) இடம் பெற்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சாவகச்சேரி தபால் நிலைய வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற நகரசபை உறுப்பினர், தபால் நிலையத்திற்குள் மோட்டார் சைக்கிளை திருப்பிய வேளையில், அவருக்கு பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில், விபத்துக்குள்ளானது.

இதனால் ஆத்திரமடைந்த குறித்த இளைஞன் நகரசபை உறுப்பினர் மீது நடு வீதியில் வைத்து தாக்குதல் நடத்தியதுடன், இரண்டாயிரம் ரூபா பணத்தையும் பறித்துச் சென்றுள்ளார்.

இதில், வெள்ளாம்போக்கட்டி கொடிகாமத்தில் வசித்து வரும் சாவகச்சேரி நகரசபை உறுப்பினரான 72வயதுடைய க.வேலாயுதபிள்ளை என்பவரே தாக்குதலுக்கு உள்ளானார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...