IMG 20211207 WA0081
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாதகலில் ஊடகவியலாளர்களாக மாறிய கடற்படை!!!

Share

மாதகலில் காணி சுவீகரிப்பு பிரச்சினைகளுக்கு எதிராக செயற்படும் மக்களுக்கும் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர்களுக்கும் கடற்படையினர் மற்றும் புலனாய்வாளர்களால் தொடரந்து அச்சுறுத்தல் எழுந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இன்றைய தினம் மாதகல் பகுதி மக்கள், கஞ்சா கடத்திய சந்தேகத்தில் நேற்றைய தினம் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மற்றும் மக்களை அங்கு நின்ற நபர் ஒருவர் காணொளி எடுத்துள்ளார்.

இதன்போது அங்கிருந்த மக்கள் அவரை நோக்கி “நீங்கள் யார் எதற்கு தங்களை காணொளி எடுக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் தான் ஒரு ஊடகவியலாளர் எனக் கூறினார். அதற்கு அங்கிருந்தவர்கள் ஊடகவியலாளர் என்றால் ஊடகவியலாளரின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கூறினர். இருந்தும் அவர் அடையாள அட்டையை காண்பிக்காமல் அங்கிருந்து நகர்ந்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...