Sajith Premadasa
செய்திகள்அரசியல்இலங்கை

மனுஷ மீது தாக்குதல் நடாத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குக!

Share

” நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார மீது தாக்குதல் நடத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (06) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர், சபாநாயகரிடம் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

” நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது சபாநாயகரின் பொறுப்பாகும்.

அதற்கான உத்தரவாதத்தை அவர் இன்னும் வழங்கவில்லை. சபாநாயகர் நடுநிலையாக செயற்பட வேண்டும். மனுஷ விவகாரத்தில் தற்போதைய சபாநாயகர் மௌனம் காக்கின்றார்.

மனுஷ நாணயக்கார மீது தாக்குதல் நடத்திய ஆளுங்கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சபைக்குள் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அரச வன்முறைக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...