Baticaloa Depot
செய்திகள்இலங்கை

இ.போ.ச. பஸ் சாரதி, நடத்துநர்கள் 29 பேருக்குத் தொற்று!!

Share

இ.போ.ச. பஸ் சாரதி, நடத்துநர்கள் 29 பேருக்குத் தொற்று!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நிலைமை அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையில் கொரோனாத் தொற்றாளர்கள் 29 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அந்த பஸ் டிப்போ மூடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை டிப்போவில் எட்டு நோயாளர்கள் எழுமாறாக இனங்காணப்பட்ட நிலையில், டிப்போவில் கடமையாற்றும் 180 பேர் நேற்றையதினம் அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது 21 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து, அந்த டிப்போவில் தொற்றாளர்களது எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது என்று மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கிரிசுதன் தெரிவித்தார்.

அதையடுத்து அந்த டிப்போ தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அதில் கடமையாற்றுவோர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...