mano ganesan
செய்திகள்அரசியல்இலங்கை

சீனா கைவிட்டதை இந்திய அரசாங்கம் முன்னெடுக்க முன்வர வேண்டும்

Share

சீனாவால் இடைநிறுத்தப்பட்ட சூரிய சக்தி மின் நிலையங்களை நிர்மாணிப்பது தொடர்பான செயற்றிட்டத்தை அதே வடக்கு தீவுகளில் முன்னெடுக்க இந்தியா உடனடியாக முன்வர வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்குபோதே இவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசு இலங்கை அரசுடன் இது சார்ந்து பேச வேண்டும். இதற்கு இலங்கை அரசாங்கமும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

சுத்தமான மின்சாரம் நம் நாட்டுக்கு தேவை என்பதை அவர் வலியுறுத்தினார். சீனா இங்கு இடை நிறுத்திய திட்டத்துக்கு பதிலாக அதனை மாலைத்தீவில் 12 தீவுகளில் முன்னெடுக்க அந்நாட்டு அரசுடன் உடன்பட்டு விட்டது.

இந்தியாவின் ஆட்சேபனை காரணமாக இத்திட்டம் இலங்கையில் பல மாதங்களுக்கு முன்னரே இடைநிறுத்தப்பட்டு விட்டது.

இத்தகவலை நம் நாட்டின் நிதி அமைச்சர் புது டில்லி சென்றிருக்கும் தருணத்தில் சீன தூதரகம் வெளியிட்டுள்ளது. இதன் பின்னணி என்னவென்று தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கையில் வடக்கிலுள்ள தீவுகளில் இந்திய அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கி சிபாரிசு செய்யும் மறு விளைவு இல்லாத சுத்தமான சூரிய சக்தி மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...