power1
செய்திகள்இலங்கை

வழமைக்குத் திரும்பியது மின் விநியோகம்!

Share

நாட்டின் பல பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ள நிலையில்,சில பகுதிகளில் இன்னும் சீராக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் பரவலாக இன்று காலை முதல் திடீர் மின்தடை ஏற்பட்ட நிலையில், மாலை 4.30 மணிக்கு பின்னரே மின்விநியோகம் பகுதி பகுதியாக சீர்செய்யப்பட்டு வருகிறது.

திடீர் மின்தடை ஏற்பட்ட நிலையில், மக்கள் கடும் அசெளகரியங்களுக்கு உள்ளாகினர்.

குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் பிற்பகலுக்கு பின்னர் நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது.

மின்சார தடை காரணமாக ரயில் தண்டவாளங்களின் சமிக்ஞை விளக்குகள் செயலிழந்து காணப்பட்டன. இதனால் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படவேண்டிய ரயில்கள் தாமதமடைந்தன.

தொலைத்தொடர்பு வரிசைகள் செயலிழந்து காணப்பட்டதுடன், சீரின்றியும் காணப்பட்டன.

நாட்டின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நின்றமையையும் காணக்கூடியதாக இருந்தது.

இந்த நிலையில், தற்போது மின்விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபை , துணை மின் நிலையங்களின் ஊடாக 1000 மெஹாவோட் மின்சாரம், தேசிய மின் தொகுதிக்குள் இன்று மாலை 4.30க்கு இணைக்கப்பட்டுள்ளது எனவும் அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம், தற்போது முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகவும் அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தம்: ஜெருசலேமின் புனிதத் தலங்கள் மீண்டும் திறப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, ஜெருசலேமில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புனிதத் தலங்கள்...

world 52
செய்திகள்இலங்கை

பெண் எம்.பி.க்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை தேவை: சபாநாயகர் மீது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குற்றச்சாட்டு!

நாடாளுமன்றில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிவைத்து, கௌரவத்திற்கு ஒவ்வாத மற்றும் அவதூறான மொழியைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சி...

world 51
செய்திகள்இந்தியா

இந்தியாவில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு: அரசு அதிகாரி தகவல்!

இந்தியாவின் சுரங்கங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில், தொடர்ந்து 24 நாட்களுக்கு மின்சாரம் உற்பத்தி செய்வதற்குத்...

world 50
செய்திகள்உலகம்

ஈரான் உடன்படிக்கையை மீறினால் கடும் இராணுவ நடவடிக்கை: ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள உடன்படிக்கையைத் தெஹ்ரான் முழுமையாகக் கடைப்பிடிக்கும் வரை, அமெரிக்கப் படைகள் ஈரானைச்...