vv2
செய்திகள்இலங்கை

மாவீரர் நாள் நினைவேந்தல் – வல்வெட்டித்துறையில் திரண்ட மக்கள் – பொலிஸ், இராணுவம் குவிப்பு

Share

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்ளும் முகமாக சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினர் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையிலேயே அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் இராணுவ வாகனங்கள் மற்றும் புலனாய்வு பிரிவினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாவீரர் நாளை முன்னிட்டு யுத்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக சிவாஜிலிங்கம், வட மாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரைப் பகுதியை நோக்கி நடைப் பயணத்தை ஆரம்பித்து அங்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது அந்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vv4 vv3 vv2 vv1 vv

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...