செய்திகள்அரசியல்இலங்கை

சர்வதேச ஒத்துழைப்பு ஒருபோதும் கிடைக்காது! – அழுத்திக் கூறுகிறார் லக்‌ஷ்மன் கிரியல்ல

Share
lakshman kiriella
Share

” சிறுபான்மையின மக்களை புறக்கணிக்கும் அரசால் ஒருபோதும் சர்வதேச ஒத்துழைப்பை பெறமுடியாது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர்,

” நல்லாட்சிமீது சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை இருந்தது. தேசிய கீதம்கூட தமிழில் இசைக்கப்பட்டது. இதனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜி-7 நாடுகளின் தலைவர்கள்கூட உரிய இடத்தை வழங்கினர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது?

சிவில் அமைப்புகளுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும். ஆனால் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் அறிக்கை விட்டால், அது தொடர்பில் சிஐடிக்கு அழைக்கப்பட்டு விளக்கம்கோரும் நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலைமை மாறவேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்கூட இவ் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.” – என்றார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...