OIL RIG
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய பெற்றோலிய மற்றும் எரிவாயு நிறுவனம் அமைக்க அனுமதி வழங்கிய அமைச்சரவை!

Share

நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் (2007 எண்.7) தேசிய பெற்றோலிய மற்றும் எரிவாயு நிறுவனத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

புதைபடிவ எரிபொருள், பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்நாட்டில் கிடைக்கின்றன என்பது ஆராய்ச்சியின் படி நிரூபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனமாக இந்த நிறுவனம் நிறுவப்படவுள்ளது.

இதனூடாக, புதைபடிவ எரிபொருள், பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வளங்களை உற்பத்தி செய்வது மற்றும் உள்ளூர் நுகர்வுக்கான வாய்ப்பை உருவாக்குதல். அத்துடன் எதிர்காலத்தில் இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளராக மாறுவதற்கான வாய்ப்பை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை எரிவாயு மீதான தேசிய கொள்கை என்பதற்கு அமைய சேமிப்பு, குழாய்கள் அமைத்தல், போக்குவரத்து மற்றும் விநியோக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, உரிமை மற்றும் கண்காணிப்பு உள்ளிட்டவற்றுக்கு பொருந்தக்கூடிய பொது-தனியார் கூட்டுறவின் கீழ் தேசிய இயற்கை எரிவாயு நிறுவனத்தை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2Fka10y8tLGVxpVydY2Opn
செய்திகள்உலகம்

பிரித்தானிய நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டம்: பங்குச் சந்தை முதலீட்டை ஊக்குவிக்கச் சேமிப்புக் கணக்கு வரம்பு குறைய வாய்ப்பு!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நாளைய தினம் (நவம்பர் 26) தனது வருடாந்தர...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...