jaffna 720x375 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கு தடை உத்தரவு!

Share

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாவீரர் நாள் நிகழ்வுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் கோப்பாய் பொலிஸாரால் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த விண்ணப்பத்துக்கு, கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ள நிலையில், அவர்களுக்கான நீதிமன்ற தடையுத்தரவு இன்று அவர்களிடம் வழங்கப்பட்டது.

இதன்படி. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் இந்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நீதிமன்ற தடையுத்தரவில், தமிழீழ விடுதலைப் புலிகளின் இறந்த நபர்களை நினைவு கூறுகின்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை, தற்போது நாட்டில் காணப்படும் கொரோனாத் தொற்றுப் பரவலை கவனத்தில் கொண்டு, நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட பொது இடத்தில், பொதுமக்களை ஒன்றுகூட்டியோ அல்லது தனிநபர் மூலமோ நடாத்துவதற்கு 15ம் இலக்க குற்றவியல் சட்டத்தின் பிரகாரம்
தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது – என்றுள்ளது.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக சூழலில் மாவீரர் நாள் நிகழ்வு அனுஷ்டிக்கப்படலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பல்கலைக்கழக சூழலில் இராணுவத்தினரும் பொலிஸாரும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...