Gas shortage
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொங்கியெழுந்த பெண் தரையில் அமர்ந்து போராட்டம்

Share

நாட்டில் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் மிக நீண்ட வரிசையில் பெற்றோலுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெயிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நிற்கின்றனர்.

இந்தநிலையில் தனக்கு எரிவாயு வழங்கப்படவில்லை எனக் கூறி பெண் ஒருவர் வாத்துவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

எரிவாயு கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் பாரவூர்தியொன்றை வழிமறித்து, தரையில் அமர்ந்து போராட்டம் ஒன்றினை நடாத்தியுள்ளார்.

எரிவாயுக் கொள்கலன் கையிருப்பு இல்லை என, எரிவாயு விநியோக நிலைய உரிமையாளர் குறித்த பெண்ணிடம் கூறியதாகவும் இருப்பினும் ஏற்க மறுத்த அவர், பாரவூர்தியை வழிமறித்து போராடியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த வாத்துவ பொலிஸ் எரிவாயு விநியோக முகவர், அந்த பெண்ணுக்கு எரிவாயு வழங்குவதாக உறுதி வழங்கியதன் பின்னர் அவர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டிருந்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதன் மூலம் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என நேற்று அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று விரிவாக ஆராயப்பட்டது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறைந்தது 50 நாட்களுக்காவது மூட வேண்டியிருக்கும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்தார்.

இதனடிப்படையில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...