WhatsApp Image 2021 11 15 at 6.19.23 PM 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகர்க்கப்பட்ட பாரிய நீர்த்தாங்கி: அரிய வகை உயிரினம் மீட்பு!

Share

மன்னார் மாவட்டம் கோந்தை பிட்டி பகுதியில் பயன்பாட்டிற்கு உதவாத நீர்த்தாங்கியொன்று தகர்க்கப்பட்டது.

சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு, கைவிடப்பட்டிருந்த நிலையில் இன்று (15) தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு இராணுவத்தின் உதவியுடன் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

தகர்க்கப்பட்ட நீர்த்தாங்கியிலிருந்து நீர் விநியோகம் இடம்பெறாத நிலையில், நீர்த்தாங்கியை சூழ்ந்து மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

இவ்வாறான நிலையில் குறித்த நீர்த்தாங்கி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், நீர்த்தாங்கியை அகற்றுமாறும் மக்கள் கோரியிருந்தனர்.

WhatsApp Image 2021 11 15 at 6.19.22 PM

ஏனெனில் நீர்த்தாங்கியில் பாரிய வெடிப்புகள் காணப்பட்டு உடைந்து விழுந்து கொண்டு காணப்பட்டமையால் அகற்றுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல், மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன், அப்பகுதி கிராம அலுவலர் ஆகியோர் குறித்த பகுதிக்கு வந்ததுடன், உடனடியாக அப்பகுதி மக்களை பாதுகாப்பிற்காக வெளியேற்றினர்.

WhatsApp Image 2021 11 15 at 6.19.23 PM

பின்னர் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த பகுதியிலுள்ள வீடுகளுக்கு சேதங்கள் ஏற்படாத வண்ணம் நீர்த்தாங்கியை குண்டு வைத்து தகர்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த நீர்த் தாங்கியில் இருந்து அரிய வகை கூகை ஆந்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2021 11 15 at 6.15.30 PM

குறித்த வகை ஆந்தை இனம் மிக அரிய வகை என்பதுடன், நீண்ட நாட்களாக குறித்த நீர் தாங்கியில் வசித்து வந்த நிலையில், நீர்த்தாங்கி தகர்க்கப்பட்ட போது ஆந்தை காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
articles2Fka10y8tLGVxpVydY2Opn
செய்திகள்உலகம்

பிரித்தானிய நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டம்: பங்குச் சந்தை முதலீட்டை ஊக்குவிக்கச் சேமிப்புக் கணக்கு வரம்பு குறைய வாய்ப்பு!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) நாளைய தினம் (நவம்பர் 26) தனது வருடாந்தர...

articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...