Fertilizer
செய்திகள்அரசியல்இலங்கை

சீன உரம் குறித்து வெளியான செய்தி!

Share

சீன உரம் குறித்து எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லையென விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மூன்றாம் தரப்பினூடாக மீள்பரிசோதனை செய்வதற்கு எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சீன நிறுவனம் மீள்பரிசோதனை செய்தாலும், ஆலை தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி நிராகரிக்கப்பட்ட உரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட உரத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பக்டீரியா இருப்பது இரு முறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து குறித்த உரம் இறக்குமதி செய்வது நிறுத்தப்பட்டு, கப்பல் சீனாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டு இருந்தது. ஆனாலும் குறித்த கப்பல் சீனாவுக்கு திரும்பாமல் மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் வந்திருந்தது.

இலங்கையின் குற்றச்சாட்டுக்கு தொடர்ந்து சீனா எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

அத்துடன், மூன்றாம் தரப்பினூடாக உரத்தை மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...