Pg 13 Arrr
செய்திகள்அரசியல்இலங்கை

யுகதனவி விவகாரம் – நாடளாவிய போராட்டத்துக்கு பங்காளிக்கட்சிகள் தீர்மானம்!

Share

கெரவலப்பிட்டிய ‘யுகதனவி’ மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அரச பங்காளிக்கட்சிகள், அரசின் இத்திட்டத்தை முறியடிப்பதற்கான முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளன.

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் அரசு வசமே இருக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படக்கூடாது எனவும் வலியுறுத்தி பங்காளிக்கட்சிகளால் அண்மையில் ‘மக்கள் சபை’ எனும் தலைப்பின்கீழ் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தை நாடு முழுவதும் நடத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் வீட்டில் நடைபெற்ற இரகசிய சந்திப்பொன்றின்போதே பங்காளிக்கட்சிகள் இந்த முடிவை எடுத்துள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...