chennai
செய்திகள்இந்தியா

மீண்டும் சேவையை தொடங்கிய சென்னை விமான நிலையம்

Share

சென்னை விமான நிலையம் தனது உள்நாட்டு விமான சேவையை மீண்டும் தொடங்கியது.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ,புனேவிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் 65 பயணிகளுடன் முதல் விமானமாக இன்று மாலை 6.18 மணிக்கு தரையிறங்கியது

கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வந்து தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இதன் காரணத்தால் சென்னைக்கு வந்த விமானங்கள் பெங்களூா்,ஹைதராபாத் விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன.

ஆனால் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானங்கள் வழக்கம்போல் செயல்பட்டன.

கனமழை காரணமாக சென்னை விமானநிலையத்தில் விமானங்களை தரையிற கூடாது என்று இந்திய விமானநிலைய ஆணையம் தடை விதித்த நிலையில் அத்தடையை மாலை 6 மணியுடன் இந்திய விமானநிலைய ஆணையம் விலக்கிக் கொண்டதையடுத்து,

புனேவிலிருந்து முதல் விமானம் 65 பயணிகளுடன் புறப்பட்டு மாலை 6.18 மணிக்கு சென்னைவிமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து டெல்லி,மும்பை,மதுரை,கோவை உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு விமானங்கள் வந்து தரையிறங்கின .

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...