20250729085821 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

ரூ. 2.5 இலட்சம் லஞ்சம்: கம்பஹா குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி அதிரடி இடைநீக்கம்!

Share

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா தலைமைப் பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரியை (OIC) பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) சஜீவ மெதவத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருடப்பட்ட தங்க நெக்லஸ் ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல் இருப்பதற்கும், அது தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கும் குறித்த அதிகாரி ரூ. 3 இலட்சம் பணம் மற்றும் முக்கால் பவுண் தங்க நகையை லஞ்சமாகக் கோரியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி, கம்பஹா தக்சிலா வித்தியாலயத்திற்கு எதிரே உள்ள வீதியில் வைத்து ரூ. 2,50,000 பணத்தை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டிருந்த போது, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைகேயுமாகப் பிடிபட்டார்.

இலங்கை பொலிஸ் சேவைக்கும் பொதுச் சேவைக்கும் அவப்பெயர் ஏற்படுத்தியமை மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கு இது தவறான முன்னுதாரணமாக அமையும் என்பதைக் கருத்திற்கொண்டு, குறித்த அதிகாரி கைது செய்யப்பட்ட திகதியிலிருந்தே (நவம்பர் 25) அமுலுக்கு வரும் வகையில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரினால் கையெழுத்திடப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...