unnamed
செய்திகள்அரசியல்இலங்கை

பங்காளிக்கட்சித் தலைவர்கள் உடனடியாக பதவி துறக்க வேண்டும்! – பெரமுன வலியுறுத்து

Share

“அரசை விமர்சிக்கும் பங்காளிக்கட்சித் தலைவர்கள் உடனடியாக அமைச்சு பதவிகளை துறக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மொட்டு கட்சி தலைவர்கள் அவர்களை வெளியேற்ற வேண்டும்.”- என்று வலியுறுத்தியுள்ளார் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி.

மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” அரச கூட்டணியிலுள்ள பங்காளிக்கட்சித் தலைவர்கள் அமைச்சு பதவி உட்பட அனைத்து சலுகைகளையும், வரப்பிரதாசங்களையும் அனுபவிக்கின்றனர். ஆனாலும் அரசை விமர்சிக்கின்றனர். இவர்கள் தமது தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே இவ்வாறு செயற்படுகின்றனர்.

அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதால் தயாசிறி ஜயசேகர உளறுகிறார். தனக்கு அமைச்சு பதவி கிடைக்கவில்லை என திஸ்ஸ வித்தாரண வெளிப்படையாகவே கவலை வெளியிட்டுள்ளார். விமல் வீரவன்ச, கம்மன்பில போன்றவர்களும் இப்படிதான். தனிப்பட்ட தேவைகளுக்காகவே அவர்கள் அரசை விமர்சிக்கின்றனர்.

விமர்சிப்பதாக இருந்தால் வெளியே சென்று விமர்சிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இவ்வாறானவர்களை எமது கட்சி தலைவர்கள் வெளியேற்ற வேண்டும்.”- என்றார் திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பி.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...