23 657af6ba0b713 md
இலங்கைசெய்திகள்

வானில் கண்கவர் ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு இன்று இரவு: ஒரு மணி நேரத்தில் 150 விண்கற்கள் தெரியும்!

Share

2025ஆம் ஆண்டின் மிகவும் கண்கவர் விண்கல் பொழிவு இன்று (டிசம்பர் 13) இரவு வானில் தெரியும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது “ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு” (Geminids Meteor Shower) என்று அழைக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.

இந்த விடயத்தை விண்வெளி விஞ்ஞானியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவில் (டிசம்பர் 13, நள்ளிரவு அல்லது டிசம்பர் 14 அதிகாலை) கிழக்கு திசையிலிருந்து இந்த விண்கல் பொழிவு தெரியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஒரு மணி நேரத்தில் சுமார் 150 விண்கற்கள் வானில் பிரகாசமாகத் தெரியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு மற்ற விண்கல் மழைகளைப் போலல்லாமல், வால் நட்சத்திரத்தின் எச்சங்களிலிருந்து உருவாகாமல், 3200 பேதான் (3200 Phaethon) எனப்படும் சிறுகோளின் சிதைவிலிருந்து உருவானது என்ற தனித்துவத்தைக் கொண்டுள்ளது.

இந்தக் கண்கவர் நிகழ்வைக் காணச் சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை; வெறும் கண்களாலேயே இதைப் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...