25 693cf3ffce4c3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வவுனியா இளைஞன்; இரண்டு சிறுநீரகங்களைத் தானம் செய்து இரு உயிர்களைக் காப்பாற்றிய நெகிழ்ச்சிச் சம்பவம்!

Share

வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர், தனது இரண்டு சிறுநீரகங்களைத் தானம் செய்ததன் மூலம் இருவரின் உயிரைக் காப்பாற்றி மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தத் தகவல் குறித்து யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ரவிராஜ் ராஜ்கிரன் என்ற 27 வயதான இளைஞன்.

திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கிய அவர், முதலில் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காகக் கடந்த டிசம்பர் 8ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் சி.டி. ஸ்கான் உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. தலையில் ஏற்பட்ட காயம் கடுமையான வீக்கம் மற்றும் உள் இரத்தக் கசிவுகளை ஏற்படுத்தியிருந்தது உறுதியானது. இதனையடுத்து, அவர் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துச் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தின் தாக்கத்தைத் தாங்க முடியாமல், அவரது மூளைச் செயற்பாடுகள் படிப்படியாகக் குறைந்து, இறுதியில் மூளை இறப்பு (Brain Death) உறுதிசெய்யப்பட்டது.

இளைஞனின் மரணச் செய்தி அவரது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களின் குடும்பத்தினர் அவரது இரண்டு சிறுநீரகங்களையும் தானம் செய்ய முன்வந்தனர்.

இதையடுத்து, மரணமடைந்த இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவக் குழு நேற்று (டிசம்பர் 12) வெற்றிகரமாகச் சத்திரசிகிச்சை மூலம் அகற்றியது.

அகற்றப்பட்ட அந்த இரண்டு சிறுநீரகங்களும் இரண்டு நோயாளிகளுக்கு மாற்றுச் சிறுநீரகமாக வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டன.

உயிரிழந்த இளைஞனுக்குச் சத்திரசிகிச்சைக் கூடத்தில் வைத்தே வைத்தியர் குழாமால் இறுதி வணக்கம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...