23 657af6ba0b713 md
இலங்கைசெய்திகள்

வானில் கண்கவர் ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு இன்று இரவு: ஒரு மணி நேரத்தில் 150 விண்கற்கள் தெரியும்!

Share

2025ஆம் ஆண்டின் மிகவும் கண்கவர் விண்கல் பொழிவு இன்று (டிசம்பர் 13) இரவு வானில் தெரியும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது “ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு” (Geminids Meteor Shower) என்று அழைக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.

இந்த விடயத்தை விண்வெளி விஞ்ஞானியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவில் (டிசம்பர் 13, நள்ளிரவு அல்லது டிசம்பர் 14 அதிகாலை) கிழக்கு திசையிலிருந்து இந்த விண்கல் பொழிவு தெரியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஒரு மணி நேரத்தில் சுமார் 150 விண்கற்கள் வானில் பிரகாசமாகத் தெரியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு மற்ற விண்கல் மழைகளைப் போலல்லாமல், வால் நட்சத்திரத்தின் எச்சங்களிலிருந்து உருவாகாமல், 3200 பேதான் (3200 Phaethon) எனப்படும் சிறுகோளின் சிதைவிலிருந்து உருவானது என்ற தனித்துவத்தைக் கொண்டுள்ளது.

இந்தக் கண்கவர் நிகழ்வைக் காணச் சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை; வெறும் கண்களாலேயே இதைப் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...