நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர், கந்தேகெட்டிய காவல்துறையின் காவலில் இருந்தபோது நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
மீகஹகியுலாவைச் சேர்ந்த நவரட்ண முதியன்செலாகே அஜந்த புஷ்பகுமார (46 வயது).
ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 02) இரவு, கந்தேகெட்டிய பிரதேச மருத்துவமனையில் இருந்து மஹியங்கனை அடிப்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர் இவர் உயிரிழந்தார்.மஹியங்கனை அடிப்படை மருத்துவமனையில் இன்று (நவம்பர் 03) பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
உதவி காவல்துறை அத்தியட்சகர் வெஹித தேசப்பிரியவின் அறிவுறுத்தலின் பேரில், மடோல்சிம காவல் நிலையப் பொறுப்பதிகாரி, சிஐ எச்.பி. திசாநாயக்க சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.