25 68d87cfbd40c4
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் ஐஸ், கசிப்பு வியாபாரிகள் கைது: 5 கிராம் ஐஸ், 24 போத்தல் கசிப்பு மீட்பு – பெண்கள் வாக்குவாதம்!

Share

மட்டக்களப்பு தலைமையக காவல்துறையின் பிரிவுக்குட்பட்ட கருவப்பங்கேணி மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 02) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.

காவல்துறை பரிசோதகர் பிரபாத் பெர்ணான்டோ தலைமையிலான தலைமையகக் காவல் நிலைய ஊழல் மற்றும் போதை ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர், கருவப்பங்கேணி பகுதியிலுள்ள பிரபல போதைப் பொருள் வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்.

இதன்போது 34 வயதுடைய அந்தப் பிரபல வியாபாரி 5 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

காவல்துறையுடன் வாக்குவாதம்: கைது செய்யப்பட்டவரை காவல்துறையினர் கொண்டு செல்ல முயன்றபோது, அங்கு பெண்கள் உட்படச் சிலர் ஒன்றிணைந்து காவல்துறையினரைத் தடுத்து, பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களைத் தாண்டி, காவல்துறையினர் சந்தேகநபரை மீட்டுச் சென்றனர்.

அதேவேளை, திருப்பெருந்துறை பகுதியில் கசிப்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டபோது, கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 56 வயதுடைய ஒருவர் 24 போத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.

போதைப் பொருள் வியாபாரியை காவல்துறை தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்காக நீதிமன்ற அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், கசிப்புடன் கைது செய்தவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

death body
இலங்கை

கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பட்டதாரி இளைஞர் பலி!

காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய வீடொன்றில் இடம்பெற்ற கட்டுமானப்...

சுகீஸ்வர பண்டார 1
இலங்கை

இன்றைய நாளில் சுகீஸ்வர பண்டாரவிற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்...