image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

Share

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை (Railway Crossing) ஒன்றை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாங்குளம் தொடருந்து நிலையத்துக்கும் முறுகண்டி தொடருந்து நிலையத்துக்கும் இடைப்பட்ட 302.6 கிலோமீற்றர் பகுதியில் இந்தக் கடவை அமைத்துத் தரப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

தொடருந்து கடவை இல்லாததால் பாடசாலை மாணவர்கள் முதல் அனைவரும் பாதிக்கப்படுவதுடன், உயிர் பயத்துடனேயே நடமாட வேண்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தக் கோரிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் முறையிட்டும் இதுவரை எவ்விதத் தீர்வும் கிடைக்கவில்லை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாகவும் இரண்டு தடவைகள் தொடருந்து திணைக்களத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தப் பகுதியில் பாதுகாப்பான புகையிரத கடவை அமைத்துத் தருமாறு மக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....