செய்திகள்இலங்கை

தரம் 6 – 9 கற்றல் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பம்

Share
Education 2
Share

நாட்டில் கொரோனாத் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கற்றல் செயற்பாடுகள் தற்போது பகுதி பகுதியாக ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தரம் 6 முதல் 9 வரையான வகுப்புகளுக்கான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயந்த நவரட்ன தெரிவித்துள்ளார்.

மேலும், வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்ட கற்றல் செயற்பாடுகளை இவ் வருட முடிவுக்குள் முழுமையாக நிறைவுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது. இதேவேளை நீண்ட இடைவேளைக்கு பின்னர் தற்போது கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு வரும் நிலையில், இவ் ஆண்டுக்கான தவணை இறுதி பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாத இறுதி வரை பிற்போடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வி நிர்வாகத்தால், கல்வி அமைச்சுக்கு இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் கலந்துரையாடி தகுந்த தீர்மானம் எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...