28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

Share

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி செய்வதாக முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் உயிர்த்த ஞாயிறு தொடர்பான முக்கிய தகவல்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்க்கட்சி முயற்சிகளை மேற்கொண்டது.

எனினும் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்ததன் மூலம் அரசாங்கம் அதற்கான வாய்ப்பை சதி செய்து தடுத்துள்ளது.

நாடாளுமன்ற செயலாளர் அலுவலகம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரின் பரிந்துரைகளை மீறி சபாநாயகர் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்துள்ளார்.

இந்த அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்ற பலம் இருக்கும் நிலையில் பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இலகுவாக வெற்றி கொண்டிருக்கலாம்.

ஆனாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய தகவல்கள் வெளிவருவதைத் தடுக்கும் வகையிலேயே அதனை நிராகரித்து அரசாங்கம் சதி செய்துள்ளது.

எனினும் எதிர்வரும் நாட்களில் எந்த வழியிலாவது குறித்த தகவல்களை நாட்டு மக்களுக்கு முன்வைக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...